Jó 29

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 யோபு அவனுடைய பேச்சைத் தொடர்ந்தான்.

2 யோபு: “தேவன் என்னைக் கண்காணித்துக் கவனித்து வந்தபோது,

3 அந்நாட்களில் தேவனுடைய ஒளி என் மீது பிரகாசித்ததால், நான் இருளின் ஊடே நடக்க முடிந்தது.

4 நான் வெற்றிகரமானவனாகவும், தேவன் எனக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்த நாட்களை நான் விரும்புகிறேன்.

5 சர்வ வல்லமையுள்ள தேவன் என்னோடிருந்தும், என் பிள்ளைகள் என்னருகே இருந்ததுமான காலத்தை நான் விரும்புகிறேன்.

6 என் வாழ்க்கை மிக நன்றாக இருந்த காலம் அது.

7 “நான் நகரவாயிலுக்குச் சென்று,

8 அங்கு எல்லா ஜனங்களும் எனக்கு மதிப்பளித்தார்கள்!

9 ஜனங்களின் தலைவர்கள் பேசுவதை நிறுத்தினார்கள்.

10 மிக முக்கியமான தலைவர்கள் கூட தங்கள் சத்தத்தைக் குறைத்து (தாழ்ந்த தொனியில்) பேசினார்கள்.

11 ஜனங்கள் எனக்குச் செவிகொடுத்தார்கள்,

12 ஏனெனில், ஏழை உதவிக்காக கூப்பிட்டபோது, நான் உதவினேன்.

13 கெட்டுப்போன மனிதன் என்னை ஆசீர்வதித்தான்.

14 நேர்மையான வாழ்க்கையை நான் ஆடையாக உடுத்தியிருந்தேன்.

15 குருடர்களுக்கு நான் கண்களானேன்.

16 நான் ஏழைகளுக்குத் தந்தையைப் போன்றிருந்தேன்.

17 நான் தீயோரின் ஆற்றலை அழித்தேன்.

18 “என் குடும்பத்தினர் என்னைச் சூழ்ந்திருக்க

19 பனிப்படர்ந்த கிளைகளும் தண்ணீரை மிகுதியாகப் பெற்ற வேர்களையுமுடைய ஆரோக்கியமான செடியைப்போல

20 என் பெலன் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டது.

21 “கடந்தக் காலத்தில், ஜனங்கள் எனக்குச் செவி கொடுத்தார்கள்.

22 நான் பேசி முடித்தப் பின்பு, எனக்குச் செவி கொடுத்த ஜனங்கள், அதற்குமேல் எதையும் கூறவில்லை.

23 மழைக்காக காத்திருப்பதைப்போல நான் பேசுவதற்காக ஜனங்கள் காத்திருந்தார்கள்.

24 நான் அந்த ஜனங்களோடு சேர்ந்து சிரித்தேன்.

25 நான் ஜனங்களுக்குத் தலைவனாக இருந்தும் கூட, நான் அந்த ஜனங்களோடிருப்பதைத் தேர்ந் தெடுத்தேன்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 29, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.