1 அப்போது தேமானைச் சார்ந்த எலிப்பாஸ் யோபுக்குப் பதிலாக,
2 “யோபுவே, நீ உண்மையாகவே ஞான முள்ளவனாக இருந்தால், நீ பிரயோஜனமற்ற வெறும் வார்த்தைகளால் பதில் கூறமாட்டாய்.
3 பொருளற்ற பேச்சுக்களாலும்
4 யோபுவே, நீ கூறும்படி நடந்தால்,
5 நீ கூறும் காரியங்கள் உனது பாவத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன.
6 நீ செய்வது தவறென நான் உன்னிடம் நிரூபிக்கத் தேவையில்லை.
7 “யோபுவே, பிறந்தவர்களில் நீதான் முதல் மனிதன் என எண்ணுகிறாயா?
8 நீ தேவனுடைய இரகசிய திட்டங்களுக்குச் செவிசாய்த்தாயா?
9 யோபுவே, உன்னைக் காட்டிலும் நாங்கள் மிகுதியாக அறிவோம்.
10 நரைமயிருள்ளோரும் வயது முதிர்ந்தோரும் எங்களோடு ஒத்திருக்கிறார்கள்.
11 தேவன் உனக்கு ஆறுதல் கூற முயற்சிக்கிறார், ஆனால் அது உனக்குப் போதவில்லை.
12 யோபுவே, ஏன் நீ புரிந்துகொள்ளவில்லை?
13 நீ கோபமான இந்தச் சொற்களைப் பேசும்போது
14 “ஒரு மனிதன் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது.
15 தேவன் அவரது தூதர்களைக்கூட நம்புகிறதில்லை.
16 மனிதன் இன்னும் கேவலமானவன்,
17 “யோபுவே, எனக்குச் செவிகொடு, நான் உனக்கு விவரிப்பேன்.
18 ஞானவான்கள் எனக்குக் கூறியவற்றை நான் உனக்குச் சொல்வேன்.
19 அவர்கள் மட்டுமே அவர்களின் நாட்டில் வாழ்ந்தார்கள்.
20 தீயவன் வாழ்க்கை முழுவதும் துன்புறுகிறான்.
21 ஒவ்வொரு சத்தமும் அவனை அச்சுறுத்துகிறது,
22 தீயவன் நம்பிக்கையற்றுக் கலங்குகிறான்,
23 அவன் அங்குமிங்கும் அலைந்துத் திரிகிறான்,
24 கவலையும் துன்பமும் அவனை அச்சுறுத்தும்.
25 ஏனெனில், தீயவன் தேவனுக்குக் கீழ்ப்படியமறுக்கிறான்.
26 தீயவன் மிகவும் அடம்பிடிப்பவன்.
27 அவன் செல்வந்தனும் கொழுத்தவனாகவும் இருப்பான்,
28 ஆனால் அவன் ஊர் அழிக்கப்படும், அவன் வீடு பாழாகும்,
29 தீயவன் பலகாலம் செல்வனாக இருக்கமாட்டான்.
30 தீயவன் இருளிலிருந்து தப்பமாட்டான்.
31 தீயவன் தகுதியற்றவற்றை நம்பி தன்னை மூடனாக்கிக்கொள்ளக் கூடாது.
32 அவன் வாழ்க்கை முடியும் முன்பே, தீயவன் வயதாகி வாடிப்போவான்.
33 இன்னும் பழுக்காத திராட்சைக் கனிகளை இழக்கின்ற திராட்சைக் கொடியைப்போன்று தீயவன் இருப்பான்.
34 ஏனெனில் தேவனற்ற மனிதர்களுக்கு எதுவுமில்லை (ஒன்றுமில்லை).
35 தீயனச் செய்து, தொல்லை விளைவிப்பதற்குத் தீயோர் வழிகளைத் திட்டமிடுகிறார்கள்.