Jó 18

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 சூகியனான பில்தாத் அப்போது பதிலாக:

2 “யோபுவே, நீ எப்போது பேசுவதை நிறுத்துவாய்?

3 நாங்கள் பசுக்களைப்போல் மூடரென நீ நினைப்பதேன்?

4 யோபுவே, உனது கோபம் உன்னையே துன்புறுத்துகிறது.

5 “ஆம், தீயவனின் தீபம் அணைந்துப்போகும்.

6 வீட்டின் ஒளி இருளாகும்.

7 அவன் அடிகள் வலியதாகவும் விரைவாகவும் இராது.

8 அவனது பாதங்கள் அவனைக் கண்ணிக்குள் வழிநடத்தும்.

9 அவன் குதிகாலை ஒரு கண்ணிப் பிடிக்கும்.

10 தரையிலுள்ள ஒரு கயிறு அவனை அகப்படுத்தும்.

11 சுற்றிலும் பயங்கரம் அவனுக்காக காத்துக்கொண்டிருக்கும்.

12 கெட்ட தொல்லைகள் அவனுக்காகப் பசித்திருக்கும்.

13 கொடிய நோய் அவனது தோலை அரிக்கும்.

14 தீயவன் அவனது வீட்டின் பாதுகாப்பிலிருந்து அகற்றப்படுவான்.

15 அவன் வீட்டில் ஒன்றும் மிஞ்சியிராது.

16 கீழேயுள்ள அவன் வேர்கள் உலர்ந்துப் (காய்ந்து) போகும்,

17 பூமியின் ஜனங்கள் அவனை நினைவு கூரமாட்டார்கள்.

18 ஜனங்கள் அவனை ஒளியிலிருந்து இருளுக்குள் தள்ளிவிடுவார்கள்.

19 அவனுக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருக்காது.

20 மேற்கிலுள்ள ஜனங்கள் அத்தீயவனுக்கு நிகழ்ந்ததைக் கேள்விப்படும்போது, அதிர்ச்சியடைவார்கள்.

21 தீயவனின் வீட்டிற்கு அது உண்மையாகவே நடக்கும்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 18, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.