1 அப்போது யோபு பதிலாக:
2 “எத்தனை காலம் நீங்கள் என்னைத் துன்புறுத்தி,
3 நீங்கள் இப்போது என்னைப் பத்துமுறை இழிவுப்படுத்தியிருக்கிறீர்கள்.
4 நான் பாவம் செய்திருந்தாலும் அது எனது தொல்லையாகும்.
5 என்னைக் காட்டிலும் உங்களைச் சிறந்தவர்களாகக் காட்ட நீங்கள் விரும்புகிறீர்கள்.
6 ஆனால் தேவனே எனக்குத் தவறிழைத்தார்.
7 ‘அவர் என்னைத் துன்புறுத்தினார்!’ என நான் கத்துகிறேன். ஆனால் எனக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை.
8 தேவன் என் வழியை அடைத்ததால் நான் தாண்டிச்செல்ல முடியவில்லை.
9 தேவன் என் பெருமையை எடுத்துப்போட்டார்.
10 தேவன் நான் அழியும்வரைக்கும் என்னை எல்லா பக்கங்களிலுமிருந்து தாக்குகிறார்.
11 தேவனுடைய கோபம் எனக்கெதிராக எரிகிறது.
12 தேவன் தமது படையை என்னைத் தாக்குவதற்கு அனுப்புகிறார்.
13 “என் சகோதரர்கள் என்னை வெறுக்கும்படி தேவன் செய்தார்.
14 என் உறவினர்கள் என்னை விட்டு சென்றார்கள்.
15 என்னை ஒரு அந்நியனைப்போலவும் வெளிநாட்டினனைப்போலவும்
16 நான் என் பணியாளைக் கூப்பிடும்போது, அவன் பதில் தருவதில்லை.
17 என் மனைவி என் மூச்சின் வாசனையை வெறுக்கிறாள்.
18 சிறு குழந்தைகளும் என்னைக் கேலிச்செய்கிறார்கள்.
19 என் நெருங்கிய நண்பர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
20 “நான் மிகவும் மெலிந்துபோனேன்.
21 “என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள்!
22 தேவன் செய்வதைப் போன்று நீங்கள் ஏன் என்னைத் தண்டிக்கிறீர்கள்?
23 “நான் சொல்வதை யாரேனும் நினைவில் வைத்து ஒரு புத்தகத்தில் எழுதமாட்டீர்களா?
24 நான் சொல்பவை என்றென்றும் நிலைக்கும்படி
25 என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்!
26 நான் என் உடலைவிட்டுச் சென்றாலும் (நான் உயிர் நீத்தாலும்), என் தோல் அழிந்துப்போனாலும்,
27 என் சொந்த கண்களால் நான் தேவனைக் காண்பேன்!
28 “நீங்கள், ‘நாம் யோபுவைத் துன்புறுத்துவோம்.
29 ஆனால் நீங்களே அஞ்சுவீர்கள்.