Jó 34

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 பின்பு எலிகூ தொடர்ந்து பேசினான். அவன்:

2 “நான் கூறுபவற்றை கேளுங்கள், ஞானிகளே,

3 உங்கள் நாவு, அது தொடுகிற உணவை ருசிக்கிறது.

4 எனவே நாம் அந்த விவாதங்களைச் சோதிப்போம், எது சரியென நாமே முடிவு செய்வோம்.

5 யோபு, ‘யோபாகிய நான் களங்கமற்றவன்,

6 நான் களங்கமற்றவன், ஆனால் நீதி எனக்கெதிராக வழங்கப்பட்டது, அது நான் பொய்யனெனக் கூறுகிறது.

7 “யோபைப்போல வேறெவனாகிலும் இருக்கிறானா?

8 யோபு தீயோரோடு நட்புடையவனாயிருந்தான்.

9 ஏன் நான் அவ்வாறு சொல்கிறேன்?

10 “உங்களால் புரிந்துகொள்ள முடியும், எனவே நான் சொல்வதைக் கேளுங்கள்.

11 ஒருவன் செய்யும் காரியங்களுக் கேற்றபடியே தேவன் பலனளிப்பார்.

12 இதுவே உண்மை, தேவன் தவறிழைக்கமாட்டார்,

13 பூமிக்குப் பொறுப்பாக இருக்கும்படி தேவனை எந்த மனிதனும் தேர்ந்தெடுக்கவில்லை,

14 தேவன் மனிதனது ஆவியை எடுக்க முடிவெடுத்தால்,

15 அப்போது பூமியின் ஜனங்கள் எல்லோரும் மரிப்பார்கள்.

16 “நீங்கள் ஞானிகளாயிருந்தால்,

17 ஒருவன் நியாயஞ்செய்வதை வெறுத்தால், அவன் அரசனாக இருக்கமுடியாது.

18 தேவனே அரசர்களிடம், ‘நீங்கள் தகுதியற்றவர்கள்’ என்கிறார்.

19 தேவன் ஜனங்களைக் காட்டிலும் தலைவர்களை நேசிப்பதில்லை.

20 ஜனங்கள் நள்ளிரவில் திடீரென மரிக்க முடியும்.

21 “ஜனங்கள் செய்வதை தேவன் கண்ணோக்குகிறார்.

22 தேவனிடமிருந்து ஒளிப்பதற்கேற்ற இருள் நிரம்பிய இடம்

23 ஜனங்களைச் சோதித்துப் பார்க்கும் நேரத்தை தேவன் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை.

24 வல்லமையுள்ள ஜனங்கள் தீய காரியங்களைச் செய்யும்போது, தேவன் கேள்விகளைக் கேட்கத் தேவையில்லை.

25 எனவே ஜனங்கள் செய்வது என்ன என்பதை தேவன் அறிகிறார்.

26 கெட்ட ஜனங்கள் செய்த தீய காரியங்களுக்காக, தேவன் அவர்களைத் தண்டிப்பார்.

27 ஏனெனில், கெட்ட ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள்.

28 அந்தக் கெட்ட ஜனங்கள் ஏழைகளைத் துன்புறுத்துகிறார்கள்.

29 ஆனால் ஏழைகளுக்கு உதவ வேண்டாமென்று தேவன் முடிவுச் செய்தால், ஒருவரும் தேவனைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்க முடியாது.

30 ஒரு அரசன் தீயவனாக இருந்து பிறர் பாவம் செய்யும்படி பண்ணினால், அப்போது, தேவன் அவனை அரசாளும்படி அனுமதிக்கமாட்டார்.

31 “ஒரு மனிதன் தேவனிடம்,

32 தேவனே, நான் உம்மைப் பார்க்க முடியாவிட்டாலும் தக்க நெறியில் வாழும் வகையைத் தயவு செய்து எனக்குப் போதியும்.

33 யோபுவே, தேவன் உனக்குப் பரிசளிக்க (பலன்தர) வேண்டுமென நீ விரும்புகிறாய்.

34 ஒரு ஞானி நான் சொல்வதைக் கேட்பான்.

35 ‘யோபு அறியாமையுடையவனைப் போலப் பேசுகிறான்.

36 யோபு இன்னும் அதிகமாகத் தண்டிக்கப்பட வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.

37 யோபு தனது பிற பாவங்களோடு இன்னும் பாவங்களை அதிகமாக்கினான்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jó 34, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.