Salmos 19

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008)

1 வானங்கள் தேவனுடைய மகிமையைக் கூறுகின்றன.

2 ஒவ்வொரு புதுநாளும் அந்தக் கதையை மேலும் கூறும்.

3 உண்மையில் பேச்சையோ, வார்த்தையையோ கேட்கமுடியாது.

4 ஆனால் அவற்றின் “குரல்” உலகமெங்கும் செல்கிறது.

5 படுக்கையறையிலிருந்து வெளிவரும் மகிழ்ச்சியான மணமகனைப்போல் சூரியன் வெளிப்படும்.

6 ஆகாயத்தின் ஒருமுனையில் தொடங்கி அதன் மறுமுனை வரைக்கும் சூரியன் எங்கும் ஓடும்.

7 கர்த்தருடைய போதனைகள் குறையற்றவை.

8 கர்த்தருடைய சட்டங்கள் நியாயமானவை.

9 கர்த்தரைத் தொழுதுகொள்வது எப்போதும் வெளிச்சமாய் பிரகாசிக்கிற ஒளி போன்றது.

10 கர்த்தருடைய போதனைகள் சுத்தமான பொன்னைக்காட்டிலும் பெருமதிப்புடையவை.

11 கர்த்தருடைய போதனைகள் அவர் வேலையாளை எச்சரிக்கின்றன.

12 கர்த்தாவே, ஒருவனும் தன் எல்லா பிழைகளையும் காணமுடியாது.

13 கர்த்தாவே, நான் செய்ய விரும்பும் பாவங்களிலிருந்து என்னை விலக்கும்.

14 என் வார்த்தைகளும் எண்ணங்களும் உமக்கு ஏற்றதாய் இருக்கட்டும்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 19, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.