1 அப்போது யோபு பதிலாக:
2 “நான் இன்றைக்கு இன்னும் மனங்கசந்து முறையிடுகிறேன்.
3 எங்கே தேவனைப் பார்க்கக் கூடுமென நான் அறிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
4 நான் தேவனிடம் என் நியாயத்தை விளக்குவேன்.
5 என் விவாதங்களுக்கு தேவன் எவ்வாறு பதிலளிப்பார் என்று அறிவேன்.
6 தேவன் எனக்கெதிராக அவரது வல்லமையைப் பயன்படுத்துவாரா?
7 நான் ஒரு நேர்மையான மனிதன்.
8 “ஆனால் நான் கிழக்கே போனால், அங்கே தேவன் இல்லை.
9 தேவன் வடக்கே பணி செய்யும்போது, நான் அவரைப் பார்க்க முடியவில்லை.
10 ஆனால் தேவன் என்னை அறிவார்.
11 தேவன் விரும்புகிறபடியே நான் எப்போதும் வாழ்ந்திருக்கிறேன்.
12 நான் தேவனுடைய கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிகிறேன்.
13 “ஆனால் தேவன் மாறுகிறதில்லை.
14 தேவன் எனக்கென்று அவர் திட்டமிட்டவற்றைச் செய்வார்.
15 அதனாலே நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன்.
16 தேவன் என் இருதயத்தை இளைக்கச் (சோர்வடைய) செய்கிறார், நான் என் தைரியத்தை இழக்கிறேன்.
17 என் முகத்தை மூடும் கருமேகத்தைப் போன்று எனக்கு நேர்ந்த தீயகாரியங்கள் உள்ளன.